போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு முன்னேற்பாட்டு பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் வருகின்ற 11ஆம் தேதி போதைப்
பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகின்ற வகையில் 10 ஆயிரம் மாணவர்கள் ஒன்று கூடி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இதற்கான முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இன்று (9.8.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.