குடிபோதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்தவர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் மாபு பாஷா (வயது 39). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விபத்து சம்பந்தமாக மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நீதிமன்ற தலைமை எழுத்தர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து மாபு பாஷாவை கைது செய்தனர்.