மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி: ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி நவ .13 திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து அவரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துச் செல்ல முயன்றனர்.அப்போது அவர் கூச்சலிட்டார். மூதாட்டியின் சத்தம் கேட்டவுடன்அக்கம் பக்கத்தினர் வர தொடங்கியவுடன்,கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை சேர்ந்த குண்டுமணி (30) என்கிற சரித்திர பதிவேடு ரவுடி மற்றும் கொசு கார்த்திக் ( 35 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.