கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு
திருச்சி, மார்ச் 28 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் , புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி நிறுவனத்தலைவர்பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் ஒன்றிணைந்து மாணவ மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான உதவி எண் 181, 112, kavalan உதவி APP மற்றும் பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தனர்.