சத்திரம் பேருந்து நிலையத்திற்குள் டூவீலர்கள் நுழைவதை தடுக்க மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
சத்திரம் பேருந்து நிலையத்திற்க்குள் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் வந்து செல்ல அனுமதி கிடையாது என்பதனை மாநகர காவல்துறை மூலம் அறிவிப்பு பதாகைள் மூலம் தெரிவித்தும், உள்ளே செல்லும் வாகனங்கள் மீது அபதாரம் விதித்தும் நடவடிக்கை எடுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து பேருந்து நிலைய த்தில் உள்ள சென்று வருகின்றனர். இன்று அவ்விடத்தில் ஆய்வு செய்த கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் மதிவானன் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டார்.