மலைக்கோட்டையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
திருச்சி, நவ.17 கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் மாணிக்க விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிவிக்க ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். கடந்த இரு வருடங்களாக கொரோனா விதிகள் கடைபிடிக்கப்பட்டு இந்த வருடம் விதிகள் தளர்த்தப்பட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இன்று முதல் விரதத்தை தொடங்கினார். இதோ திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்.