ஞான விநாயகர் ஆலய ராஜகோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை
திருவெறும்பூர் அருகே அருகே நவல்பட்டு போலீஸ் காலனியில் ஞான விநாயகர் ஆலயம் உள்ளது.இந்த ஆலை அந்தப் பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.
இந்நிலையில் இந்த ஆலயத்திற்கு என ராஜகோபுரம் இல்லாத நிலையில் தற்பொழுது புதிதாக ராஜ கோபுரம் கட்டுவதற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி கட்டுவதற்கு ஞான விநாயகர் வழிபாட்டு நல சங்கத்தினர்முடிவு செய்தனர்.
அதன்படி ராஜ கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் ஞான விநாயகர் ஆலய வழிபாட்டு நலச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.