பிஷப் ஹீபர் கல்லூரியில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது வழங்கும் விழா!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் கல்வி சமூகப்பணி துறை சார்பில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது வழங்கும் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு திருச்சி, தஞ்சை திருமண்டலத்தின் பேராயர் D.சந்திரசேகரன் தலைமை தாங்கி, சிறந்த சமூக பணி சேவகர்களுக்கு விருதினை வழங்கி
கெளரவித்தார். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் பால் தயாபரன், திருமண்டலப் பொறுப்பாளர் முத்துக்களை மற்றும் இளங்கலை சமூகப் பணித்துறை மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.