திருச்சி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் காளீஸ்வரன், இவரது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து அவரைப் பற்றி தவறாக சித்தரித்து அடிக்கடி பதிவுகள் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து காளீஸ்வரன் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் காளீஸ்வரன் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்தது தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரனி பகுதியை சேர்ந்த ரவிமுத்துகுமார்(42) என்பது தெரிய வந்தது.

ரவிமுத்துக்குமாரை முழுமையாக விசாரணை செய்ததில் இதற்கு முழு காரணம் திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வரும் பா.ஜ.க. விவசாய அணியை சேர்ந்த திலகா(50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் திருச்சி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒரே கட்சியை சேர்ந்த திலகாவின் செயல்பாடு மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
