திருச்சியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களிடையே சதுரங்கப் போட்டி
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், இன்று (25.7.22) திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற செஸ் விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், மாணவர்களுடன் சதுரங்கம் விளையாடி போட்டியினைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விமலா, வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம், வட்டாட்சியர் த.கலைவாணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.