அரசு பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் ஸ்டிக்கர்- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று (20.7.22) மாலை 3.30 மணியளவில், திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் விளம்பரப் பதாகைகள் வைத்தல்,ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துதல் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார்.