ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டி விழிப்புணர்வு ஓட்டம்
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் இருந்து, தமிழ்நாட்டில் முதன்முதலாக, ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (22.7.22) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.ஞானசுகந்தி மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.