தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திட உழைக்கும் முதலமைச்சர் : அமைச்சர் அன்பில்மகேஸ் பேச்சு
திருச்சி, ஏப்.3 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த விழா பொதுக் கூட்டம், திருச்சி கிழக்கு மாநகர், காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவிலே முதன்மை மாநிலமாக உயர்த்தும் நோக்கில் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று பேசினார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.