மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையில் ஆட்சியர் ஆய்வு

0 82

திருச்சி, மார்ச்13  திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் திருச்சிமாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தனி வட்டாட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.