சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.06 கோடி உண்டியல் காணிக்கை

0 59
திருச்சி, மார்ச் 13   திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்  உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறுபக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள்,  வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர்  எண்ணினர்.
அப்போது கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை   எண்ணியதில்  ரூ.1 கோடியே,06 லட்சத்து, 20 ஆயிரத்து, 548  ரொக்கமும்,2 கிலோ 150 கிராம் தங்கமும், 3 கிலோ 580  கிராம்  வெள்ளியும், 104 அயல்நாட்டு நோட்டுகளும்,489 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர்  பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.