கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு அருகே பெருமாம்பட்டி வடக்கிக்களத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(17). இவர் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த புத்தாநத்தம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.