மின் கட்டண உயர்வினை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 29 தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வினை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெ.1 டோல்கேட்டில் தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வினை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் D.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் P R.பரமசிவம், R.விஜயகுமார்,S.பொன்ராமன், C.தொப்பளான், V.கருணாநிதி R.ராஜ்குமார், A.அர்ஜூனன், E.இளங்கோவன், A.வரதன், A.புவனேஸ்வரி, T.பென்னாச்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை விளக்கி
T.செல்வராஜ் சிறப்புரையாற்றினார். இதில் K.அண்ணாதுரை, P.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.