ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, ஆக.25 திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்றும் வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் மாதிரியை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.