கொரோனா விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி – அமைச்சர் தொடங்கி வைத்தார்!
சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஓவியர் சித்தன் சிவாயின் கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி இன்று அரியங்கலம் லெட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஓவியன் சித்தன் சிவா கொரோனா காலகட்டங்களில் வரைந்த ஓவியங்கள் மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில், ஒய்வு பெற்ற ஆசிரியர் அ.கலைமணி, தொ.மு.ச துணைச் செயலாளர் சுரேஷ் கனி, மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ .

அன்பாயலம் செந்தில்குமார்,தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.