

திருச்சிராப்பள்ளி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், முன்னாள் துணை மேயர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.
