“மக்கள் பாராட்டும் வகையில்” செயல்படும் கவுன்சிலர் செந்தில்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை பணியாளர்களை கொண்டு சீரமைத்தார்.

மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ததுடன், எரியாமல் இருந்த தெருவிளக்குகளை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய தெருவிளக்குகளை பொருத்தினார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு கவுன்சிலரா? என பூரிப்பு அடைந்துள்ளனர்.