பயனற்ற நீர்த்தேக்க தொட்டிகளை கவுன்சிலர் செந்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று பிளோமினால்புரம் தெரு, காமராஜர் தெரு, பர்மா காலனி, அம்பேத்கர் தெரு, அந்தோனியார் கோயில் தெரு, ராஜவீதி ஆகிய பகுதிகளில் பயன்பாடு இன்றி இருந்த நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு

வரப்பட்டன. தொடர்ந்து நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டன.