கட்டிட வேலையின்போது தவறுதலாக மாடியிலிருந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் சாவு
திருச்சி, மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர்(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. சுப்ரமணியபுரம், அமரர் ஜீவா தெரு பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும்போது தவறுதலாக மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.
அவரை சிகிச்சைக்காக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து திருச்சி, கே.கே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.