கிராமங்களை நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கிராமங்களை மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை பறிபோகும். விவசாயம் பாதிக்கப்படும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கிராமங்களை
மாநராட்சியோடு இணைக்கக்கூடாது என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 15க்கும் அதிகமான கிராம மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று கிழக்குறிச்சி சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.