திருச்சி மாவட்ட இல்ல குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
இந்தியன் மருத்துவ குழந்தைகள் நலக்குழுமம் மற்றும் இந்தியன் அகாடமி ஆப் பிடியராட்டிஸ் சார்பில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் திருச்சி மாவட்ட இல்ல குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.10.22) நடைபெற்றது. செயலாளர் டாக்டர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இல்ல குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குழந்தைகள் மற்றும் இல்ல கண்காணிப்பாளர்களிடம் வழங்கினார்.
குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன், உறுப்பினர்கள் முனைவர் பிரபு, சியாமளா, பவுலின், நேத்தலிக் மற்றும் நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் அவர்கள் இல்லகண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்தார்