அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், பாப்பாக்குறிச்சிக் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, பள்ளி தலைமையாசிரியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.