மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்பு பேரணி
திருச்சி, நவ.16 திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாப்பாக்குறிச்சி காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வ்வில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, பள்ளி தலைமையாசிரியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.