தமிழகத்தில் இன்று சுமார் 20 மாதங்களுக்கு பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளியானது திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறை யில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பூங்கொத்து வழங்கி சாக்லேட்டுகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்று அவர்களோடு கலந்துரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இனி கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்