

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதியான இன்று தொடங்குகிறது. திருச்சியில் எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உற்சாகமாய் வருகை புரிந்து வருகின்றனர்.
சுமார் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறந்து உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை உற்சாகமாய் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
மேளதாளங்கள் முழங்க மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதித்து ஆசிரியர்கள் வகுப்பறையில் அனுப்பி வைக்கின்றனர்.