முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்மா. பிரதீப் குமார், இன்று (12.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்புடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் திரு.குணசேகரன், நீர்வளத் துறை அலுவலர்கள் உடன் உள்ளனர்.