தே.மு.தி.க. கொடி அறிமுக தினம்
திருச்சி, பிப்.12 தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி அறிமுக தினத்தை முன்னிட்டு துறையூர் கிழக்கு ஒன்றியம் கீழக்குனப்பட்டி அண்ணாநகர் கிளைக் கழகத்தில் கொடியேற்று விழா துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே .எஸ்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் நகர கழக செயலாளர் சங்கர் துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் துறையூர் கிழக்கு ஒன்றிய அவைத் த்தலைவர் முருகேசன் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி மாவட்ட பிரதிநிதி மாமுண்டி துறையூர் நகர கழகவைத் தலைவர் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் துறையூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி அண்ணாநகர் கிளைக் கழக செயலாளர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.