திருவெறும்பூர் அருகே பைக் மோதி முதியவர் பலி

0 49
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 16  திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் (81). இவர் கடத்த 12ம் தேதி நத்தமாடிபட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த. அப்போது பொன்மலைப்பட்டி முல்லை நகர் 7வது தெருவை சேர்ந்த ராஜா மகன் ஜான் ஆபிரகாம் (25) என்பவர் ஓட்டி வந்து இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில் பலத்த காயம்அடைந்த சேவியர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.