குமுளூர் அரசு கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம், ஒய் ஆர் சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.இந்த கண் பரிசோதனை முகாமில் 250க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட ஆசிரியர் சக்திவேல் செய்திருந்தார்
இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள், வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.