TMSSS சொந்தம் வரவேற்பு குழந்தைகள் இல்லத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா
திருச்சி மாநகரம் TMSSS சொந்தம் வரவேற்பு குழந்தைகள் இல்லத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுதப் பெருவிழா 13.08.22 கொண்டாடப்பட்டது. குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு,குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வசந்தா, சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இல்ல கண்காணிப்பாளர் ஆசிக் முஸ்தபா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.