நல்லவர்களுக்கு வாக்களித்தால் அது உங்களின் எதிர்காலம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

0 353
Stalin trichy visit

திருச்சி, ஏப். 13  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நம்பர்1 டோல்கேட்டில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தேன்மொழியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தேன்மொழியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான்,

நல்லவர்களுக்கு வாக்களித்தால் அது உங்களின் எதிர்காலம். அயோக்கியர்களுக்கு வாக்களித்தால் அது அவர்களின் எதிர்காலம். அரசியல் என்பது ஒரு குறிப்பிடவருக்கு மட்டுமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.இங்கு அடித்தட்டு மக்களின் உணர்வுகள்,
உரிமைகள் பறிக்கப்படுகிறது. பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இத்தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு என்றும், அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது. விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும். எனவே ஒரு முறை நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் இரா. தேன்மொழிக் வாய்ப்பு தாருங்கள் என சீமான் கேட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த தேர்தல் பரப்புரையின் போது மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.