முக்கொம்பில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டம் நம்பர் 2 கரியமாணிக்கம் ஊராட்சி, சிறுகாம்பூர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதைத் தொடர்ந்து கரை அரிப்பினைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.