முக்கொம்பில் தண்ணீர் வெளியேற்றம் அதிகரிப்பு: கங்காரு மனநலக்காப்பகத்தில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
முக்கொம்பு காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து கம்பரசம்பேட்டையில் உள்ள கங்காரு மனநலக் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், நள்ளிரவில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டு, நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் .ச.துரைராஜ் உடனிருந்தார்.