பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார்ந்த போட்டிகள்
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நெய்வேலி கிராமத்தில் பாரம்பரிய நிகழ்ச்சி அம்மாயி திருவிழாவில் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வைத்து 50க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் பனை லோகநாதன் சின்னமணி சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.