கார்கில் போர் வெற்றி தினம் – திருச்சி ABVP அமைப்பினர் சார்பாக மரியாதை!
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ABVP திருச்சி மாநகர் சார்பாக போரில் வீர மரணமடைந்த மாவீரர் மேஜர்.சரவணன் நினைவு ஸ்துபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ABVP தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா தலைமையில், மாநகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கார்கில் போரில் வீர மரணமடைந்த மாவீரர் ராஜா அவர்கள் நினைவு ஸ்துபியில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ABVP நகர தலைவர் துளசி ராமன் மற்றும் ABVP நகர செயலாளர் ஸ்ரீ. செல்வ கணேஷ் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy