எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
புதுடெல்லி, ஜூலை 23 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை , தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து “புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை என்பதை எடுத்துரைத்தார்.
உடன் கவிஞர் கனிமொழி எம்.பி, வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, சு.வெங்கடேசன், இரவிக்குமார், ஜோதிமணி, துரை.வைகோ, சசிகாந்த் செந்தில், நவாஸ்கனி, வை.செல்வராஜ், சச்சிதானந்தம், மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.