பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, ஏப்.11 திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகதிறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.