மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

0 170
Stalin trichy visit

திருச்சி, செப்.8 மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் –பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி-யை சந்தித்து திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் ஆர்.மோகன், வட்ட கழகச் செயலாளர் எஸ். சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் கே.பன்னீர்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.