கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாமினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாமினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆர். வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் செஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர் த. ராஜேந்திரன் மற்றும் கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.