அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, சித்த மருத்துவ கண்காட்சியினைப் பார்வையிட்டு, உரையாற்றினார். சித்த மருத்துவப் பிரிவில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலரிடம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேட்டறிந்து, சிறப்பான முறையில் மக்களுக்கு சித்த மருத்துவ சேவையாற்றிட அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர். காமராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் ச. துரைராஜ், பேரூராட்சித் தலைவர் சிவகாமசுந்தரி இராஜலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்