நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 23.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இன்று (25.01.2023) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
