பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, நவ.19 திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.