எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
திருச்சி, நவ. 20 திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வருகின்ற 21 ம் தேதி காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை.
எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 21 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி,ஏ.கே. நகர், பரமசிபுரம்,சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சண்ணபுரம், உமர் நகர், பாரதி நகர், வ உ சி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர்,ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்று மங்கலம், பச்சாம்பேட்டை,மம்முடி சோழமங்கலம், பெரியவர்சீலி,மயில்ரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பம்பரம் சுற்றி, பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், நன்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் யோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.