முசிறி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.அசோக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
முசிறி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான முசிறி, சிங்காரசோலை, பார்வதிபுரம், பஸ் நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாபட்டி, திருச்சிரோடு, துறையூர்ரோடு, சிலோன்காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைபுத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, வடுகபட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம் பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.