75வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி கலந்துரையாடல்
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் மோடி இன்று இமச்சல பிரதேசம் சிம்லாவில் இருந்து இந்திய முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்படட் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் காணொலி கலந்துரையாடல் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்கா தாரணி, விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்தினர்கள், மாவட்ட புகழ் பெற்ற குடிமகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.