நியாய விலை கடையில் வட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் செவிந்தலிங்கபுரம் ஊராட்சியில் மாங்கரைப் பேட்டையில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வட்ட வழங்கல் அலுவலர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் தரமான பொருட்கள் உரிய காலங்களில் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். மேலும் பொருட்களின் அளவு எடை சரியாக உள்ளதா இருப்பு சரியாக உள்ளதா என்பதையும் சோதனை செய்தார். அப்போது சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜீவா விற்பனையாளர் பால்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்